வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா!
Posted by tamilcinemanews
நாயகன் யார், நாயகி யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் இணையத்தில் கூறிவந்தார்.
இந்நிலையில் வெற்றிமாறன் படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறார் சூர்யா. தான் நடித்து வரும் ‘மாற்றான்’ படத்தின் பணிகள் முடிந்தவுடன் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
சொந்த மகனைப் போல பாசம் காட்டிய அம்மா! – அஜீத் உருக்கம்
Posted by tamilcinemanews
சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், “அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன். அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!,” என்று கூறியுள்ளார். திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, “ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!,” என்று கூறியுள்ளார்.
என் சாவுக்கு கூடும் கூட்டம்….
மேலும் அவர் கூறுகையில், “எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
சோனா பாலியல் பலாத்கார வழக்கு: எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்
Posted by tamilcinemanews
மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கு இரு வார இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால், முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என்றும் அவர் சாட்சியை கலைத்துவிடக்கூடும் என்றும் அரசு வக்கீல் சி.பாலசுப்பிரமணியம் வாதிட்டார்.
இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “சரணுக்கு 2 வாரத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. வழக்கின் சாட்சிகளை கலைப்பதற்கு முயற்சிக்கக்கூடாது. மறுஉத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சரண் கையெழுத்திட வேண்டும்.
ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் தொகையும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளித்து சரண் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்,” என்றார். முன்னதாக, எஸ்பிபி சரண் தன்னிடம் தவறாக நடந்ததற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி அவற்றை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தார் சோனா.
மேலும் இன்று (வெள்ளிக்கிழமைக்குள்) சரண் தன்னிடம் மன்னிப்புக் கேட்டால் வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் சரண் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை. இதற்கிடையே அவருக்கு முன்ஜாமீனும் கிடைத்துள்ளது.
வீட்டிலேயே சிலை விழுந்து வணங்கும் நடிகை
Posted by tamilcinemanews
தற்போது ஸ்ரீகாந்துடன் பாகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜனனி அய்யர். அவன் இவன் படத்தில் அறிமுகமாகியிருந்த ஜனனிக்கு அடுத்த படம் கிடைக்க இத்தனை மாதங்கள் ஆகியிருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்று ஜனனியிடம் கேட்டால், கதை அமையணும்ல என்பார். ஆனால் நிஜக்காரணம் அதுவல்ல. தனது நிலைமை புரியாமல் அவர் கேட்ட சம்பளம்தான்.
ஒரு வழியாக இதையெல்லாம் அவர் உணர சுமார் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது
என்று வைங்களேன்... நாம் சொல்லப்போவது அவரது பக்தி பற்றி. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வாரம் தவறாமல் போய்விடுகிற பக்தை இவர். முன்பெல்லாம் இவர் போகும்போது ஃபிகரு சூப்பராயிருக்கே என்று ஒரு லுக் விட்டுவிட்டு அகன்று விடும் இளசுகள் கூட்டம், இப்போது உள்ளே போனால் ஒரு ஆட்டோகிராஃப் என்று பேப்பரை நீட்டுகிறார்களாம்.
இறைவனின் சன்னதியில் அவன் மட்டுமே பெரியவன். அங்கு போய் ஆட்டோகிராஃப் போட்டுக் கொண்டிருந்தால், இருக்கிற பிழைப்பும் பிரச்சனைதான் என்றெல்லாம் யோசித்த ஜனனி முன்பு போல் இப்போது கோவிலுக்கு போவதில்லை.
அப்புறம் எப்படி? மைலாப்பூர் கபாலீஸ்வரர் சிலையை தனது வீட்டிலேயே வாங்கி வைத்திருக்கிறாராம். நேரம் தவறாமல் பூஜையும் நடக்கிறது.
ஹன்சிகா மோத்வானி, டாப்ஸி மாதிரி பெரிய அந்தஸ்த்தை கொடுங்க சாமியோவ்..கண் பார்வையில் பிரச்சனை கவலை ஏற்படுத்தும் ஸ்ருதிஹாசன்
Posted by tamilcinemanews
7 ஆம் அறிவு படத்தில் ஸ்ருதியை பார்ப்பவர்கள் அது போஸ்டராக இருந்தால் கூட சூடம் கொளுத்தி கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். அத்தனை அழகு. மிக சமீபத்தில்தான் இப்படி ஒரு அழகுடன் மிளிர்கிறார் அவர். அதற்கு காரணம், தமிழ்சினிமாவில் அவருக்கு கிடைத்து வரும் ஆஃபர்களும், அதற்கு இணையான சம்பளமும்தான்.
இத்தனை அழகான ஒருவருக்கு கேன்சர் என்றால் எப்படியிருக்கும்? இந்த
பரிதாபத்தைதான் எதிர்பார்க்கிறார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும். இந்த கேன்சருக்கான மூலிகையை கண்டுபிடிக்க கால இயந்திரத்தில் ஏறி கி.மு. வுக்கு போகிறார் சூர்யா என்று போகிறது கதை. ஸ்ருதிக்கு போய் கேன்சரா? படத்தில் கூட அப்படி ஒரு நிலைமை வரக்கூடாதுப்பா என்ற கமல் ரசிகர்கள் கண்ணீர் வடிப்பார்கள் அல்லவா? அது போகட்டும்.... நிஜமாகவே கவலைப்பட வேண்டிய சமாச்சாரம் இது.
ஸ்ருதியின் பார்வையில் சிறு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதாம் சமீபகாலமாக. யார் அருகில் நின்றாலும் அவர்கள் மங்கலாகதான் தெரிகிறார்கள். அதே நபர் து£ரத்தில் நிற்கும்போதுதான் பளிச்சென்று தெரிகிறாராம். நெருங்கி வந்து கை கொடுக்கும் சிலரை உத்தேசமாக யூகித்துதான் பேசுகிறாராம் ஸ்ருதி.
விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து நிற்கிறது. இந்த கண் பிரச்சனையை அவர் சரி செய்து கொண்டிருக்கலாமே என்று கவலைப்படுகிறார்கள் இவற்றையெல்லாம் நேரில் காண்பவர்கள்.
கண்ணாடி போட வேண்டியிருக்கும். அல்லது லென்ஸ் பொறுத்த வேண்டியிருக்கும் என்று கவலைப்படுகிறாரோ என்னவோ?
அழகே உன்னை ஆராதிக்கிறேன்... - நடிக்க வரும் பாடகி ஸ்ரேயா கோஷல்?
Posted by tamilcinemanews
'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்று சொல்வதில் தமிழ்சினிமாக்காரர்களுக்கு இணை அவர்களேதான். கொட்டிவாக்கத்தில் வசிக்கும் மயிலாக இருந்தாலும் சரி, கொரியாவில் பிறந்த குயிலாக இருந்தாலும் சரி, பார்க்க லட்சணமாக இருந்தால் நடிக்கிறீங்களா என்றொரு கொஸ்டீனை நீட்டி விடுவார்கள்.
அப்படி இவர்களால் அழைத்துவரப்பட்ட அநேக தேவதைகள் இன்று கோடம்பாக்கத்தில்
சம்பாதித்து உலகம் முழுக்க சொத்துக்களை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிக்கவே மாட்டேன் என்று முரண்டு பிடித்து வந்த அழகான பாடகி ஒருவரை எப்படியோ பேசி சம்மதிக்க வைத்திருக்கிறாராம் ஒரு இயக்குனர். அவர்? பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்.
பின்னணி பாடகிகளில் ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு மட்டுமல்ல, முகத்திற்கும் தனி அழகு உண்டு. மேடைக் கச்சேரிகளில் ஸ்ரேயா வந்தால் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது கூட்டம். அதற்கு குரல் மட்டும் காரணமல்ல என்பது அவருக்கும் தெரியும்.
இசையமைப்பாளர்கள் கூட ஸ்ரேயா கோஷல் சென்னை வந்தால் ஐந்து நட்சத்திர விடுதியில்தான் அறை ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். சம்பளமும் மற்றவர்களை விட சற்று அதிகம்தான். இவரைதான் தமிழ்ப்பட இயக்குனர் ஒருவர் பார்த்து நடிக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். இப்போதைக்கு சம்மதித்திருக்கும் ஸ்ரேயா, தன் வீட்டாரும் ஒப்புக் கொண்டால்தான் அதை நிறைவேற்றுவாராம்.
அதுவரைக்கும் டைரக்டர் யார் என்பதும் ரகசியமாக இருந்துவிட்டு போகட்டுமே..எப்படி கவிஞரானேன்? தனுஷ் விளக்கம்
Posted by tamilcinemanews
மயக்கம் என்ன படத்தின் பாடல் வெளியிட்டு விழாவை அதிக ஆர்ப்பாட்டமில்லாமல்
நடத்தி முடித்த செல்வராகவன்-தனுஷ்-ரிச்சா குழுவினர், அதன்பின் சில தினங்கள் கழித்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். வரும்போதே மவுன லேகியம் சாப்பிட்டு வந்திருப்பார் போல. எந்தவொரு கேள்விக்கும் இரண்டு வரிகளுக்கு மிகாமல் பதிலளித்துக் கொண்டிருந்தார் செல்வராகவன். அதிலும் சில கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் அவர் சொன்ன பதில் ஷார்ப்.
படத்தில் வரும் ஒரு பாடலை செல்வாவும் தனுஷும் இணைந்தே பாடியிருக்கிறார்கள். அவர் வருவதற்கு சற்று முன்புவரை அந்த ஹாலில் ஒலித்த அந்த பாடல் இன்றைய இளசுகளை சுண்டி இழுக்கும் டைப். அப்படியிருந்தும், இனிமே சத்தியமா பாட மாட்டேன். மன்னிச்சுக்கோங்க என்று செல்வராகவன் புலம்பியதுதான் ஏனென்றே புரியவில்லை. ஏன் நீங்க பாடுனது உங்களுக்கே பிடிக்கலையா என்ற கேள்விக்கு, ரொம்ப நாராசமா இருந்திச்சு என்றார் அவர்.
அருகிலிருந்த மயக்கம் என்ன பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஒரு
குடிகாரன் பாடுவது போன்ற சுச்சுவேஷன் அது. அதனால் இப்படி ஒரு குரல் இருந்தா பொறுத்தமா இருக்குமேன்னு செல்வாவை பாட வைத்தேன் என்றார். சில பாடல்களை தனுஷும் எழுதியிருக்கிறராம். .
எனக்கு ஏற்கனவே கதை தெரியும். அதனால் இந்த பாடலை எழுதுவதற்கு கவிஞர்களை தேடியபோது நானே எழுதுறேன். நல்லாயிருந்தா யூஸ் பண்ணுங்க. இலலைன்னா விட்டுடலாம் என்றேன். அப்புறம் நான் எழுதிய பாடல் வரிகளில் கொஞ்சம் கரெக்ஷன் பண்ணி என்னையும் கவிஞராக்கிட்டார் செல்வா என்றார் தனுஷ்.
